267. மழை புரை பூங் குழல் விநதை, வான்,
     இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல்
     பெரும் பறவைதம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல்,
     காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழைஎனும் அக்கொடிபயந்தாள், கொடியுடனே
     செடி முதலாக் கண்ட எல்லாம்.

    மழை புரை பூங்குழல் - மேகம் போன்ற பொலிவு பெற்ற
கூந்தல்; கூகை - ஆந்தை; இழை புரையும் தாம்பிரை - (மகளிர்க்கு)
ஆபரணம் போன்ற தாம்பிரை என்னும் பெயருடையால்.            24-3