|     2678. | வேதியர்கள்     வேத மொழி      வேறு பல கூற,     காதல் மிக நின்று, எழில்      கமண்டலுவின் நல் நீர்     மா தவர்கள் வீசி, நெடு மா      மலர்கள் தூவ,     போது மணம் நாறு குளிர் சோலை      கொடு புக்கான். |  
     வேதியர்கள் வேதமொழி வேறுபல கூற - அந்தணர்கள் பல்வேறு     வகைப்பட்ட வேத வாக்கியங்களைச் சொல்ல; காதல் மிக நின்று எழில்     கமண்டலுவின் நல்நீர் மாதவர்கள் வீசி - அன்பு மிகுதலால் சூழ்ந்து     நின்று அழகிய கமண்டலங்களிலுள்ள நல்ல நீரை மிக்க தவமுடையவர்கள்     தெளித்து; நெடுமாமலர்கள் தூவ - அழகிய பெரிய மலர்களை மேலே     சொரிய, (அகத்தியர் இராமனை); போது மணம் நாறு குளிர் சோலை     கொடு புக்கான் - மலர்கள் மணம் வீசும் குளிர்ந்த சோலைக்குள்     அழைத்துக் கொண்டு போனார்.      வேதமந்திரங்களைக் கூறி நன்னீர் தெளித்து மலர் தூவல் அம்முனிவர்     செய்யும் உபசார வகை. கமண்டலு - கமண்டலம். குண்டிகை கரசும் எனவும்     வழங்கப்பெறும். போது என்பது அப்பொழுது மலரும் நிலையில்     உள்ளமலர்.                                                  48  |