268. | வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்; மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் கதை என்னும் மாது தந்தாள்; அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்; தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம் ஆகிய பலவும், தெரிக்குங்காலை. |
கண பணப் பை வியாளம் - கூட்டமாயுள்ள படமும் நச்சுப்பையும் கொண்ட பாம்புகள் (பல தலைகள் கொண்ட பாம்புகளைக் குறித்தது); மருள் - அச்சம்; புயங்கம் - பாம்பு; செலசரம் - நீரில் இயங்கும் உயிரினங்கள்.24-4 |