269.'அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை,
     கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கத்துருவுடனே, குரோதவசை,
     தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதிமுறையே, இவைஅனைத்தும் பயந்தனர்கள்;
     விநதை சுதன் அருணன் மென்தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப்
     புணர, உதித்தனம் யாம், புவனிமீதே.

    புது மதி சேர் நுதல் - (அமாவாசைக்குப் பின்) புதிதாகத்
தோன்றும் (பிறைச்) சந்திரன் போன்ற நெற்றி.                     24-5