270. | என்று உரைத்த எருவை அரசனைத் துன்று தாரவர் நோக்கித் தொழுது, கண் ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக- நின்று, மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார். |
எருவை அரசன் - பருந்துகளுக்கு அரசனாகிய சடாயு; துன்று தாரவர் - நெருங்கத் தொடுத்த மாலை அணிந்த இராமலக்குவர்கள்; முத்தம் - முத்துப் (போன்ற). 27-1 |