270. என்று உரைத்த
     எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித்
    தொழுது, கண்
ஒன்றும் முத்தம்
     முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன
     நீர்மை நிகழ்த்தினார்.

    எருவை அரசன் - பருந்துகளுக்கு அரசனாகிய சடாயு; துன்று
தாரவர் -
நெருங்கத் தொடுத்த மாலை அணிந்த இராமலக்குவர்கள்;
முத்தம் - முத்துப் (போன்ற).                                 27-1