5. சூர்ப்பணகைப் படலம் 271. | கண்டு தன்இரு வழி களிப்ப, கா....கத்து எண் தரும் புளகிதம் எழுப்ப, ஏதிலாள் கொண்ட தீவினைத் திறக் குறிப்பை ஓர்கிலாள் அண்டர் நாதனை, 'இவன் ஆர்?' என்று உன்னுவாள். |
எண்தரும் புளகிதம் - எண்ணத்தக்க புளகம் (மெய்ச் சிலிர்ப்பு); அண்டர் நாதன் - தேவர்க்குத் தலைவனாகிய இராமபிரான்; ஓர் கிலாள் - குறிப்பாக உணராதவளாய். 11-1 |