6. கரன் வதைப் படலம்

273.ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்;
     அறுத்தான் அறுத்தான் என் மூக்கை;
கூற்றே கூற்றே என் உடலை,
     குலையும் குலையும்; அது கண்டீர்;
காற்றே தீயே எனத் திரியும்
     கரனே! கரனுக்கு இளையோரே!
தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள்
     எல்லா வகையும் தோற்றேனே.

    ஆற்றேன் - தாங்க மாட்டேன்; வல்லபங்கள் - வெற்றிகள்.  7-1