முகப்பு
தொடக்கம்
284.
ஏவலின் புரி தொழில்
எவையும் செய்து, செய்து
ஓவு இலர், துயர்க் கடற்கு
ஒழிவு காண்கிலர்,
மேவரும் பெரும் பயம்
பிடித்து, விண்ணவர்
தாவினர், தலைத் தலை
தாழ்ந்து நிற்கவே.
ஓவு இலர் -
நீங்குதல் இலராய் (ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்);
ஒழிவு -
முடிவு. 7-2
மேல்