286.பெருந் திசை இரிந்திடப்
     பெயர்த்தும் வென்ற நாள்,
பருந் திறல் புயம்
     பிணிப்புண்டு, பாசத்தால்
அருந் தளைப்படும் துயர்
     அதனுக்கு அஞ்சியே,
புரந்தரன் களாஞ்சி கை
     எடுத்துப் போற்றவே.

    களாஞ்சி - காளாஞ்சி, தாம்பூல எச்சில் துப்பும் கலம்.       11-2