2878.'இருவர் மானிடர்;
     தாபதர்; ஏந்திய
வரி வில், வாள், கையர்;
     மன்மதன் மேனியர்;
தரும நீரா;
     தயரதன் காதலர்;
செருவில் நேரும்
     நிருதரைத் தேடுவார்.

    இருவர் மானிடர் - (அதுகேட்ட சூர்ப்பணகை) இரண்டு மனிதர்கள்;
தாபதர் - தவ வேடத்திலிருக்கும் முனிவர்கள்; ஏந்திய வரிவில் வாள்
கையர் -
தரித்த கட்டமைந்த வில்லும் வாளுமுடைய கையினர்; மன்மதன்
மேனியர்-
மன்மதனைப் போன்ற அழகான வடிவுடையவர்கள்; தரும நீரர்-
தருமநெறியில் நடப்பவர்கள்; தயரதன் காதலர் - தசரதச் சக்கரவர்த்தியின்
மைந்தர்கள்; செருவில் நேரும் - போரில் எதிர்ப்படும்; நிருதரைத்
தேடுவார் -
அரக்கர்களைத் தேடித் திரிந்து கொண்டிருப்பவர்;

     மரவுரியுடுத்தமையும் சடைமுடி தரித்தமையும் பற்றித் 'தாபதர்'
என்றாள். தரும நீரர் - இராமலக்குவரின் பேரழகும், பெருங்குணமும்
விளங்கும்.                                                    4