288. நிகர் அறு புவனம் மூன்று
     என நிகழ்த்திய
தொகையினில் தொகுத்திடும்
     அண்டச் சூழலில்
வகையினைக் குரு முறை
     மரபின் வஞ்சியாப்
புகரவன் விரித்து எடுத்து
     இயம்பிப் போகவே.

    குருமுறை மரபின் வஞ்சியாப் புகரவன் - குரு நெறி
மரபிலிருந்து வஞ்சியாத ஒளி (புகழ்) உடைய சுர குரு.              15-2