2899.போர்ப் பெரும் பணை
     'பொம்' என் முழக்கமா,
நீர்த் தரங்கம் நெடுந்
     தடந் தோள்களா,
ஆர்தது எழுந்தது -
     இறுதியில், ஆர் கலிக்
கார்க் கருங் கடல்
     கால் கிளர்ந்தென்னவே.

    போர்ப் பெரும் பணை - போரினைத் தெரிவிக்கும் பெரிய
முரசுகளின் ஓசை; பொம் என் முழக்கமா - பொம்மென்று ஒலிக்கின்ற
ஆரவாரமாக இருக்க; நீர்த் தரங்கம் ஆ - கடல் நீரிலுள்ள அலைகளாக;
நெடுந் தடத் தோள்கள் - நீண்ட பெரிய தோள்கள் இருக்க; இறுதி இல்
ஆர் கலி கார்க் கருங்கடல் -
முடிவே இல்லாத ஆரவாரத்தையும் மேகம்
போன்ற கரு நிறத்தையுமுடைய கடல்; கால் கிளர்ந்து என்ன - ஊழிக்
காற்றினால் பொங்கி மேலெழுந்தாற் போல; ஆர்த்து எழுந்தது - (அரக்கர்
சேனை) ஆரவாரம் செய்து கொண்டு (போருக்கு) எழுந்தது.

     ஊழிக் காலத்தில் கிளர்ந்து பேராரவாரத்துடன் கடல் எழுவது போல
அரக்கர் சேனை எழுந்தது என்பது தற்குறிப்பேற்றவணி. பொம்மென -
ஒலிக் குறிப்பு. பணை - ஒலி : முதலாகுபெயர். ஏ - ஈற்றசை.

     சேனை கடல் என்றதற்கேற்ப அலைகள் தோள்களாகக் கூறப்பெற்றன.
                                                            25