290.'உரிய நும் குலத்து உளேன்
     ஒருவன் யான்' எனப்
பரிவுறும் பழமைகள்
     எடுத்துப் பன்னியே,
விரை மலர் சிதறி, மெய்
     அன்பு மீக்கொளா,
நிருதி அங்கு அடிமுறை
     காத்து நிற்கவே.

    நிருதி - தென்மேற்குத் திசைக் காவலன்.                   17-1