2928. வனம் துகள்பட்டன, மலையின்
     வான் உயர்
கனம் துகள்பட்டன;
     கடல்கள் தூர்ந்தன,
இனம் தொகு தூளியால்;
     இசைப்பது என் இனி?-
சினம் தொகு நெடுங்
     கடற் சேனை செல்லவே.

    சினம் தொகு - கோபம் மிக்க; நெடுங் கடல் சேனை - பெரிய
கடல் போன்ற அந்த அரக்கர் சேனைகள்; செல்ல - புறப்பட்டபோது;
இனம் தொகு தூளியால் - கூட்டமாகத் திரண்டெழுந்த தூசியால்; வனம்
துகள் பட்டன-
காடுகளெங்கும் புழுதி படிந்தன; வான் உயர் மலையின்-
வானோங்கி யுயர்ந்த மலைகளின் மேல்; கனம் துகள் பட்டன- படிந்திருந்த
மேகங்களும் அத் தூசியால் மூடப்பட்டன; கடல்கள் தூர்ந்தன -
கடல்களும் தூர்ந்துபோயின; இனி இசைப்பது என்? - இனிச் சொல்ல
வேண்டுவது என்ன உள்ளது?; ஏ - ஈற்றசை.

     சேனைகள் எழுப்பிய புழுதி வனம் முழுதும்
தூளிமயமாக்கியதுமல்லாமல் வானத்து மேகங்களையும் தூளியாக்கியது;
கடலிலும் நிரம்பித் தூர்த்தது. தொடர்புயர்வு நவிற்சியணி.

     சேனையைக் கடல் என்றது அதன் மிகுதிநோக்கி.               54