8. மாரீசன் வதைப் படலம்

295. ஆயிரம் அடல்
     கையுடையானை மழு வாளால்
'ஏ' எனும் உரைக்குள் உயிர்
     செற்ற எதிர் இல்லோன்
மேய விறல் முற்றும்
     வரி வெஞ் சிலையினோடும்
தாயவன் வலித் தகைமை
     யாம் உறு தகைத்தோ.

    ஆயிரம் அடல் கையுடையான் - ஆயிரம் வெற்றிக் கைகளை
உடைய கார்த்தவீரியன்; எதிர் இல்லோன் - ஈடு இல்லாதவன் (வாலி);
தாயவன் - கடந்தவன் (இராமன்).                            25-1