9. இராவணன் சூழ்ச்சிப் படலம்

296.ஓவரு கவனம்மீது
     உற்றுச் சென்றுளான்,
பூ வரு சாலையுள்
     பொருந்த நோக்குறா,
'யாவர், இவ் இருக்கையுள்
     இருந்த நீர்?' என்றான் -
தேவரும் இடர் உறத்
     திரிந்த மேனியான்.

    ஓவரு - நீக்குதற்கு அரிய; பூவரு சாலை - மலர்கள் மலரும்
(இலைக்) குடில்; நோக்குறா - பார்த்து.                       24-1