10. சடாயு உயிர் நீத்த படலம்

300.'பின்னவன் உரையினை
     மறுத்து, பேதையேன்,
அன்னவன்தனைக் கடிது
     அகற்றினேன்; பொரு
மன்னவன் சிறை அற
     மயங்கினேன்; விதி
இன்னமும் எவ் வினை
     இயற்றுமோ?' எனா,

     பின்னவன் - தம்பி (இலக்குவன்); பொரு மன்னவன் -
(இராவணனை எதிர்த்து) போரிட்ட கழுகரசன் (சடாயு).           45-1