3004. | அன்றியும், அக் கணத்து, அமரர் ஆர்த்து எழ, பொன் தெரி வடிம்புடைப் பொரு இல் வாளியால், வன் தொழில் தீயவன் மகுட மாத் தலை ஒன்று ஒழித்து, இரண்டையும் உருட்டினான் அரோ. |
அன்றியும் - அவையல்லாமலும்; அக்கணத்து - அதே நேரத்தில்; அமரர் ஆர்த்து எழ - தேவர்கள் (மகிழ்ச்சியால்) ஆரவாரஞ் செய்து கொண்டாடும்படி; பொன் தெரி வடிம்பு உடை - பொன் மயமாய் விளங்கும் கூரிய நுனியுடைய; பொரு இல் வாளியால் - ஒப்பற்ற அம்புகளால்; வன் தொழில் தீயவன் - கொடுந் தொழில்களையுடைய தீயவனான அத் திரிசிராவின்; மகுட மாத் தலை - பொன் முடியணிந்த மூன்று பெரிய தலைகளுள்; ஒன்று ஒழிந்து இரண்டையும் - ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மற்றைய இரண்டு தலைகளையும்; உருட்டினான் - (துணிக்கப்பட்டுக்) கீழே விழுந்து உருளச் செய்தான். இராமன் தன் ஒப்பற்ற பாணத்தால் அந்தத் திரிசிராவின் மூன்று தலைகளில் இரண்டை உருளச் செய்தான் என்பது. 130 |