302.'பெண்ணை விட்டு அமைந்திடின்
     பிழையது ஆம்' என,
உள் நிறை கூடமும்
     உவந்த சாலையும்,
மண்ணினில் இராமன் மார்பு
     அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி
     வேண்டி எய்தினாள்.