3038. அடங்கல் இல் கொடுந் தொழில்
     அரக்கர், அவ் அனந்தன்
படம் கிழிதர, படிதனில்,
     பலவிதப் போர்,
கடம் கலுழ் தடங் களிறு,
     தேர், பரி, கடாவி,
தொடங்கினர்; நெடுந்தகையும் வெங்
     கணை துரந்தான்.

    அடங்கல் இல் - கட்டுக்கடங்காத; கொடுந் தொழில் அரக்கர் -
கொடிய செயல்களையுடைய இராக்கதர்கள்; அவ் அனந்தன் படம் கிழிதர
-
அந்த ஆதிசேடனது படம் கிழிந்துவிடும்படி; படிதனில் - பூமியில்; கடம்
கலுழ் தடங் களிறு -
மத நீர் பொழியும் பெரிய யானைகளையும்; தேர்
பரி -
தேர்களையும் குதிரைகளையும்; கடாவி - மிகுதியாகச் செலுத்தி; பல
விதப் போர் தொடங்கினர் -
பல வகைப்பட்ட போரைச் செய்யத்
தொடங்கினார்கள்; நெடுந் தகையும் - பண்பால் சிறந்த இராமபிரானும்;
வெங் கணை துரந்தான் - கொடிய அம்புகளை விரைவாக எய்தான்.

     அரக்கர் அடங்காமல் சேனைகளோடு மீண்டும் போர் தொடங்க,
இராமபிரானும் கொடிய கணைகளை ஏவினான் என்பது 'அவ் அனந்தன்
படம் கிழிதர' என்றது படைகள் யாவும் ஓரிடத்தே ஒருங்கே திரண்ட பார
மிகுதி பற்றி. கடம் : கன்னம் இங்கே - மதநீர்க்கு இடவாகு பெயர்.
நெடுந்தகை : பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.  164