3040.வாளின் வனம், வேலின் வனம், வார்
     சிலை வனம், திண்
தோளின் வனம், என்று இவை
     துவன்றி, நிருதப் பேர்
ஆளின் வனம் நின்றதனை,
     அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன்
     குழுவினின், குறைபடுத்தான்.

    வாளின் வனம் - வாட்படைகளின் தொகுதியும்; வேலின் வனம் -
வேற்பைடையின் தொகுதியும்; வார் சிலை வனம் - விற்படைகளின்
தொகுதியும்; திண் தோளின் வனம் - வலிய தோள்களின் தொகுதியும்;
என்று இவை துவன்றி - ஆகிய இவை போதும் நெருங்கப் பெற்று;
நிருதப் பேர் ஆளின் வனம் நின்றதனை - அரக்க வீரர்களின் பெரிய
தொகுதி எதிர் நின்றதை; அம்பின் வனம் என்னும் - (இராமன்) தன்
அம்புகளின் தொகுதியென்று சொல்லக் கூடிய; கோளின் வன வன்
குழுவினின் -
கொலைத் தொழிலையுடைய அழகான வலிய கூட்டத்தால்;
குறை படுத்தான் - துணித்து வீழ்த்தினான்.

     வாள் முதலிய படைக்கலங்களோடு எதிர் நின்ற அரக்கர்களின்
தொகுதியை இராமபிரான் தன்னுடைய அம்புகளால் துணித்திட்டான் என்பது.
வனம் - அடர்ந்த வலிய தொகுதி : (மிகுதி) பெரு மழையால் வனங்கள்
அழிதல் போல அழிந்தன என்பது குறிப்பு.                       166