இராமன் பிடித்த வில் ஒடிதலும் வானவர் ஏங்கி அஞ்சுதலும்

கலிவிருத்தம்

3049.'முடிப்பென் இன்று, ஒரு
     மொய் கணையால்' எனா,
தொடுத்து நின்று, உயர் தோள்
     உற வாங்கினான்;
பிடித்த திண் சிலை, பேர்
     அகல் வானிடை
இடிப்பின் ஓசை பட,
     கடிது இற்றதே.

    'இன்று - இப்பொழுது; ஒரு மொய் கணையால் - ஏவிய அம்பு
ஒன்றாலே; முடிப்பென்' எனா - இவனையழிப்பேன் என்று மனங்
கொண்டு; நின்று தொடுத்து - (இராமன்) நிலை நின்று ஓர் அம்பை
வில்லிலே பூட்டி; உயர் தோள் உற வாங்கினான் - உயர்ந்த தன்
தோளையளாவும்படி

(வில்லின் நாணியை) வலிய இழுத்தான்; (அப்போது); பிடித்த திண் சிலை -
(இராமன்) கையில் பிடித்திருந்த வலிய வில்லானது; பேர் அகல் வான்
இடை இடிப்பின் -
அகன்ற பெரிய வானத்திலுண்டாகும் இடி முழக்கம்
போன்ற; ஓசை பட - ஓசையுண்டாகுமாறு; கடிது இற்றது - விரைவிலே
ஒடிந்தது.

     ஏ : ஈற்றசை. இவனையழிப்பேனென்று இராமன் கணை தொடுத்து
வில்லை வளைக்கும் பொழுது இடி போலப் பேரொலியெழ அந்த வில்
முறிந்தது என்பது.                                           175