3053. | கொடுத்த வில்லை, அக் கொண்டல் நிறத்தினான் எடுத்து வாங்கி, வலம் கொண்டு, இடக் கையில் பிடித்த போது, நெறி பிழைத்தோர்க்கு எலாம் துடித்தவால், இடக் கண்ணொடு தோளுமே. |
கொடுத்த வில்லை - (வருணன் கொடுத்த அந்த வில்லை; அக் கொண்டல் நிறத்தினான் - நீர் கொண்ட மேகம் போன்ற கரிய நிறத்தையுடைய இராமபிரான்; எடுத்து - கையில் ஏந்தி; வலம் கொண்டு வாங்கி - வலிமையால் வளைத்து; இடக் கையில் பிடித்த போது - இடக் கையால் பிடித்த பொழுது; நெறி பிழைத்தோர்க்கு எலாம் - தரும நெறியிலிருந்து தவறிய அரக்கர் எல்லோர்க்கும்; இடக் கண்ணொடு தோளும் துடித்த - இடக் கண்ணும் இடத்தோளும் துடித்தன; ஆல். ஏ : அசைகள். வாங்குதல் - வளைத்தல். ஆடவர்க்கு இடக்கண்ணும் தோளும் துடித்தல் தீய நிமித்தம். கொண்டல் - தொழிலாகு பெயர். 179 |