சூர்ப்பணகை அழுது புலம்பி, இலங்கைக்கு ஏகுதல்

3064. இங்கு நின்றது
     உரைத்தும்: இராவணன்
தங்கை தன் கை,
     வயிறு தகர்த்தனள்;
கங்குல் அன்ன கரனைத்
     தழீஇ, நெடும்
பொங்கு வெங் குருதிப்
     புரண்டாள் அரோ.

    இங்கு நின்றது - இவ்விடத்தில் (சொல்லாமல்) எஞ்சி நின்ற
செய்தியை; உரைத்தும் - இனிச் சொல்லுவோம்; இராவணன் தங்கை -
இராவணன் தங்கையான சூர்ப்பணகை; தன் கை வயிறு தகர்த்தனள் -
தன் கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு; கங்குல் அன்ன கரனைத்
தழீஇ -
இருளையொத்த மேனியையுடைய கரனைத் தழுவி; நெடும்
பொங்கு வெம் குருதிப் புரண்டாள் -
மேலே பொங்கியெழுந்த நெடிய
வெப்பமான இரத்த வெள்ளத்தில் விழுந்து புரண்டாள்.

     அரோ : ஈற்றசை. கரன் என்றது அவனது உயிர் நீத்த உடலை. தழீஇ
சொல்லிசையளபெடை. வயிறு தகர்த்தல் - சோகமுற்ற மகளிரின் இயல்பு. 190