3076. | அன்னவன் அமைச்சரை நோக்கி, ஆண்டு ஒரு நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர், 'என்னைகொல் பணி?' என இறைஞ்சுகின்றனர். கின்னரர், பெரும் பயம் கிடந்த நெஞ்சினர். |
அன்னவன் - இராவணன்; அமைச்சரை நோக்கி - தன் அமைச்சர்களைப் பார்த்து; ஆண்டு - அவ்விடத்தில்; ஒரு நல்மொழி பகரினும் - ஒரு நல்ல சொல்லைப் பேசிடினும்; நடுங்கும் சிந்தையர் - (தங்களைத் தண்டிக்கும்படி உரைத்ததாக எண்ணி) அஞ்சும் மனத்தவர்களாய்; பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் - மிகுந்த பயம் செறிந்த உள்ளத்தவர்களாய்; பணி என்னை கொல் என - கட்டளை யாதோ என்று; கின்னரர் - கின்னர வேந்தர்; இறைஞ்சுகின்றனர் - வணங்கி நிற்கவும்.... கின்னரர் - கின்னரம் என்னும் இசைக் கருவி வாசிக்கும் தேவ இனத்தவர். 10 |