3078. திசை உறு கரிகளைச்
     செற்று, தேவனும்
வசையுறக் கயிலையை மறித்து,
     வான் எலாம்
அசைவுறப் புரந்தரன்
     அடர்த்த தோள்களின்
இசையினைத் தும்புரு
     இசையின் ஏத்தவே.

    திசை உறு கரிகளை - எட்டுத் திக்குகளிலும் உள்ள யானைகளை
(திக்கயங்களை); செற்று - வென்று; தேவனும் வசையுற - சிவபெருமானும்
பழியேற்கும்படி; கயிலையை மறித்து - மேரு மலையைப் பெயர்த்து;
வானெலாம் அசைவுற - விண்ணுலகம் நடுங்க; புரந்தரன் அடர்த்த -
இந்திரனை நெருங்கிப் போரிட்ட; தோள்களின் - (இருபது) தோள்களினது;
இசையினை  - புகழை; தும்புரு - தும்புருவென்னும் கந்தருவன்;
இசையின் ஏத்த - (வீணை) இசையோடு புகழவும்....(ஏ - அசை).

     இராவணன் வெற்றித் தோள்களைத் தும்புரு என்னும் கந்தருவன்
இசை பாடிப் புகழ்ந்தமை கூறினார். தும்புரு நாரதன் போலும் முனிவன்.
அவன் வீணை கலாவதி.                                       12