3086. | குண்டலம் முதலிய குலம் கொள் பேர் அணி மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால், 'உண்டுகொல் இரவு, இனி உலகம் ஏழினும்? எண் திசை மருங்கினும் இருள் இன்று' என்னவே, |
குண்டலம் முதலிய - குண்டலம் தொடங்கி அமைந்த; குலம் கொள் பேரணி - பல்வேறு வகையினவாகிய சிறந்த அணிகலன்கள்; மண்டிய பேர் ஒளி - திரண்ட மிக்க ஒளியை; வயங்கி வீசலால் - (எங்கும்) விளங்கும்படி வீசுவதால்; இனி உலகம் ஏழினும் - இனி மேல் ஏழு உலகங்களிலும்; இரவு உண்டு கொல் - இருள் செறிந்த பொழுதும் உண்டாகுமோ?; எண்திசை மருங்கினும் - எட்டுத் திக்குகளின் பக்கங்களிலும்; இருள் இன்று என்ன - இருள் காண முடியவில்லையே என்று கூறும் படியாகவும்.....(ஏ - அசை). ஏழு உலகமாவன- பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், சத்ய லோகம் என மேல் ஏழும், அதல, விதல, கதல, தராதல ரசாதல, மகாதல, பாதலம் எனக் கீழ் ஏழுமாம். 20 |