3087. கங்கையே முதலிய
     கடவுட் கன்னியர்
கொங்கைகள் சுமந்து இடை
     கொடியின் ஒல்கிட,
செங் கையில் அரிசியும்
     மலரும் சிந்தினர்,
மங்கல முறை மொழி
     கூறி, வாழ்த்தவே,

    கங்கையே முதலிய - கங்கை தொடங்கியமைந்த; கடவுட் கன்னியர்-
(புண்ணிய தீர்த்தங்களாகிற) தெய்வப் பெண்கள்; கொங்கைகள் சுமந்து -
பருத்த தனங்கள் தாங்கிய; இடைகொடியின் ஒல்கிட - தம் இடை கொடி
போல் துவள நின்று; செங்கையில் அரிசியும் மலரும் சிந்தினர் - சிவந்த
கைகளில் ஏந்திய மங்கல அரிசியையும் மலர்களையும் (இராவணன் மேல்)
தூவினராகி; முறை - வரிசையாக; மங்கல மொழி கூறி வாழ்த்த - மங்கல
மொழிகள் கூறி வாழ்த்தவும்......(ஏ - அசை).21