3091.முடையுடை வாயினள், முறையிட்டு,
     ஆர்த்து எழு
கடையுகக் கடல் ஒலி
     காட்டக் காந்துவாள்,
குட திசைச் செக்கரின்
     சேந்த கூந்தலாள்,
வட திசை வாயிலின்
     வந்து தோன்றினாள்.

    முடையுடை வாயினள் - முடை நாற்றம் வீசும் வாயினால்;
முறையிட்டு ஆர்த்து - தன் குறையை உரக்கக் கூவுகின்றவளும்; எழு
கடையுகக் கடல் ஒலி காட்ட -
யுக முடிவில் எழும் கடலின் ஆரவாரம்
செய்து; காந்துவாள் - மனம் எரிகின்றவளும்; குடதிசைக் செக்கரின்
சேந்த கூந்தலாள் -
மேற்குத் திசையிற் காணப்படும் அந்திச் செவ்வானம்
போல் சிவந்த கூந்தலை உடையவளுமாய்; வடதிசை வாயிலின் வந்து
தோன்றினாள் -
வடக்குப் பக்கத்து அரண்மனை வாசலில் வந்து
சேர்ந்தாள்.

     இலங்கைக்கு வடக்கிலுள்ள தண்டக வனத்தில் சின்னா பின்னப்பட்டுச்
சூர்ப்பணகை வருதலால் வடதிசை வாயிலில் புகுந்து வருதல் கூறினார்.25