3098. | 'சொல்-பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ? "இற்பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள்; கற்பு இறந்தாள்" என, கரன்கொலாம் இவள் பொற்பு அறையாக்கினன்போல்?' என்றார் சிலர். |
சொல் பிறந்தார்க்கு - புகழ் உரைகள் கூறத்தக்க உயர் குடிப் பிறந்த பெண்களுக்கு; இது - (கற்பழியும்) இச் செயல்; துணிய ஒண்ணுமோ? - துணிந்து செய்யக் கூடியதாகுமோ?; அன்று (ஆதலால்) இற்பிறந்தார் தமக்கு - நற்குடிப் பிறந்தவர்களுக்கு; இயைவ செய்திலள் - பொருந்திய செயல் இவள் செய்திலள்; கற்பு இறந்தாள் என - கற்பு நெறி தவறினாள் என்று; இவள் பொற்பு அறை ஆக்கினன் போல் கரன் கொல் ஆம் - கரன் இப் பெண்ணின் அழகை அழியும்படி செய்தான் போலும்; என்றார் சிலர் - எனச் சில அரக்கர் எண்ணினர். இவள் ஒழுக்கக் கேடு கண்டு கரன் உறுப்பு அரிந்து தண்டித்தான் என்று சிலர் கருதினர். 32 |