3100.'இனி ஒரு கற்பம்
     உண்டுஎன்னின் அன்றியே,
வனை கழல் வயங்கு வாள்
     வீரர் வல்லரோ?
பனி வரும் கானிடைப் பழிப்பு
     இல் நோன்புடை
முனிவரர் வெகுளியின் முடிபு'
     என்றார் சிலர்.

    இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றியே - இனி வேறொரு
ஊழிக்காலம் உண்டானால் அன்றி; வனை கழல் வயங்கு வாள் -
புனைந்த வீரக் கழலையும், விளங்கும் வாளையும் உடைய; வீரர்
வல்லரோ? -
(இந்நாளில் வாழும்) வீரர் இச் செயல் செய்ய வல்லமை
உடையவர்களோ? (இலர்); (ஆதலால்); பனி வரும் கானிடை - அச்சம்
உண்டாகும் காட்டில்; பழிப்பில் நோன்புடை முனிவரர் - குற்றமற்ற
தவம்செய்யும் தவசிகள் கொண்ட; வெகுளியின் முடிபு - சினத்தின்
விளைவேயாகும்; என்றார் சிலர் - என்று சிலர் கூறினார்கள்.

     கற்பம் - ஊழிக்காலம்;                                  34