3104.நாந்தக உழவர்மேல்
     நாடும் தண்டத்தர்,
காந்திய மனத்தினர்,
     புலவி கைம்மிகச்
சேந்த கண் அதிகமும்
     சிவந்து நீர் உக,
வேந்தனுக்கு இளையவள்
    தாளில் வீழ்ந்தனர்.

    (வேறு சில பெண்கள்); நாந்தக உழவர் மேல் - வாள் உழவரான
தம் கணவர்மேல்; நாடும் தண்டத்தர் - (ஊடல் காரணமாக) தண்டனை தர
விரும்பியவர்களாய்; காந்திய மனத்தினர் - எரியும் நெஞ்சினராய்; புலவி
கைம்மிக -
ஊடல் மிகக் கொண்டு; சேந்த கண், - சினத்தால் சிவந்த
கண்கள்; அதிகமும் சிவந்து நீர் உக - (இப்போது சூர்ப்பணகையைக்
கண்டு) மேலும் கலங்கிச் சிவந்து கண்ணீர் சிந்த; வேந்தனுக்கு
இளையவள் -
இராவணன் தங்கையின்; தாளில் வீழ்ந்தனர் - பாதங்களில்
வீழ்ந்தனர்.                                                   38