3106. எழு என, மலை என,
     எழுந்த தோள்களைத்
தழுவிய வளைத் தளிர்
     நெகிழ, தாமரை
முழு முகத்து இரு கயல்
     முத்தின் ஆலிகள்
பொழிதர, சிலர் உளம்
     பொருமி விம்முவார்.

    சிலர் - வேறு சில பெண்கள்; எழு என - தூண் போன்ற; மலை
என -
குன்று போன்ற; எழுந்த தோள்களை - (தம் நாயகரின்) உயர்ந்த
தோள்களை; தழுவிய வளைத் தளிர் நெகிழ - அணைத்திருந்த தளிர்
போன்ற வளையணிந்த கரங்கள் நெகிழ்ச்சியடையவும்; தாமரை முழு
முகத்து -
தாமரை போன்ற எழில் மிக்க முகத்திலுள்ள; இரு கயல் -
கயல்மீன் போன்ற இரு கண்களிலும்; முத்தின் ஆலிகள் பொழிதர -
முத்துப் போன்ற கண்ணீர்த் துளிகள் சிந்தவும்; உளம் பொருமி
விம்முவார் -
மனம் விம்மி அழத் தொடங்கினார்கள்.

     தழுவிய கணவரையும் நெகிழவிட்டு அழுத பெண்களின் செயலைக்
கூறினார்.                                                    40