3113.விரிந்த வலயங்கள் மிடை
     தோள் படர, மீதிட்டு
எரிந்த நயனங்கள் எயிறின்
     புறம் இமைப்ப,
நெரிந்த புருவங்கள் நெடு
     நெற்றியினை முற்ற,
திரிந்த புவனங்கள்; வினை,
     தேவரும், அயர்த்தார்.

    விரிந்த வலயங்கள் - ஒளி விரிந்த வாகு வளைகள்; மிடை தோள்
படர -
பொருந்திய தோள்கள் பொங்கி எழவும்; நயனங்கள் - கண்கள்;
மீதிட்டு எரிந்த - நெருப்புக் கிளர்ந்து எரியவும்; எயிறின் புறம் இமைப்ப
-
பற்கள் வெளித் தோன்றி ஒளிவீசவும்; நெரிந்த புருவங்கள் -
வளைந்துயரும் புருவங்கள்; நெடு நெற்றியினை முற்ற - விரிந்த
நெற்றியின் மீதேறிச் சேரவும்; (அக்கோபக் காட்சி் கண்டு); புவனங்கள்
திரிந்த -
உலகங்கள் நிலைகுலைந்தோடின; தேவரும் - தேவர்களும்;
வினை அயர்த்தார் - செய்தற்குரிய கடமைகளை மறந்தனர்.

     பொங்கியெழும் தோளும், நெருப்புமிழ் கண்களும், புறத்திடும்
பற்களும், உயரும் புருவமும் சின அறிகுறிகள். 'நயனங்கள் எரிந்த' என்ற
தொடரில் 'எரிந்த என்ற பலவின் பால் வினைமுற்றை (முற்றெச்சம்) என
எச்சமாக்கிப் பொருள் கொள்ளப்பட்டது.47