கரன் முதலியோர் பற்றி இராவணன் வினவல் 3128. | என்று உரைசெயா, நகைசெயா, எரி விழிப்பான், 'வன் துணை இலா இருவர் மானிடரை வாளால் கொன்றிலர்களா, நெடிய குன்றுடைய கானில் நின்ற கரனே முதலினோர் நிருதர்?' என்றான். |
என்று உரை செயா - எனக் கூறி; நகை செயா - சிரித்து; எரி விழிப்பான் - நெருப்பெழ விழித்து (இராவணன்); நெடிய குன்றுடைய கானில் - பெரு மலை சூழ்ந்த கானகத்தில்; நின்ற கரனே முதலினோர் நிருதர் - காவலில் நிலை பெற்ற கரன் முதலாகிய அரக்க வீரர்கள்; வன்துணை இலா இருவர் மானிடரை - பெருந்துணை ஏதும் இல்லாமல் எதிர்த்த அவ்விரு மனிதர்களை; வாளால் கொன்றிலர்களா? - வாள் வீசிக் கொல்ல வில்லையா?; என்றான் - என்று வினவினான். துணை வலிமையும் இல்லாதவர்களை ஆயுத வலிமை கொண்டோர் தோற்பிக்க வில்லையா என்றான். 62 |