3158. தாவியாது, தீது எனாது,
     தையலாளை மெய் உறப்
பாவியாத போது இலாத பாவி-
     மாழை, பானல், வேல்,
காவி, ஆன கண்ணி மேனி
     காண மூளும் ஆசையால்,
ஆவி சால நொந்து நொந்து, -
     அழுங்குவானும் ஆயினான்.

    தாவியாது - (தடுமாறும்) உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தாது; தீது
எனாது -
(பிறன்மனை நயத்தலைத்) தீவினை எனக் கருதாது; தையலாளை-
சீதையை; மெய் உறப் பாவியாத - (சிறிது நேரமேனும்) உள்ளார
எண்ணாமல்; போது இலாத பாவி - (நல்ல) நேரம் இல்லாத (காலம்) பாவி
(இராவணன்); மாழை - மாவடுவும்; பானல் - நெய்தல் பூவும்; வேல் -
வேலாயுதமும்; காவி - கருங்கு வளையும்; ஆன கண்ணி - நிகர்த்த
கண்களையுடைய சீதையின்; மேனி காண மூளும் ஆசையால் -
உடம்பைக் காணப் பொங்கும் காமத்தால்; ஆவி சால நொந்து நொந்து -
உயிர் பெரிதும் துன்பம் கொள்ள; அழுங்குவானும் ஆயினான் -
வருந்துகின்றவனும் ஆனான்.

     பழி பாவங்களைக் காமத்தால் இராவணன் மறந்து போனான்.     92