இராவணன் ஆணைப்படி பகலவன் வருதல் 3182. | என்னப் பன்னி, இடர் உழவா, 'இரவோடு இவனைக் கொண்டு அகற்றி; முன்னைப் பகலும் பகலோனும் வருக' என்றான்; மொழியாமுன், உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த; ஒரு நொடியில் பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்தவால். |
என்னப் பன்னி - இவ்வாறு பல்வகையிலும் கூறி; இடர் உழவா - துன்பம் அனுபவித்து; 'இரவோடு இவனைக் கொண்டு அகற்றி - இரவு நேரத்தையும்' இச்சந்திரனையும் இவ்விடம் விட்டு நீக்கி; முன்னைப் பகலும்' பகலோனும் வருக - முன்பு போலவே பகற் பொழுதையும் சூரியனையும் கொண்டு வருக; என்றான் - என இராவணன் ஆணை பிறப்பித்தான்; மொழியாமுன் - இந்தக் கட்டளையைக் கூறி முடிக்கும் முன்பே; உன்னற்கு அரிய - நினைத்தற்கு (துன்பத்தால்) முடியாத; உடுபதியும் இரவும் ஒழிந்த - சந்திரனும் இரவுப் பொழுதும் அகன்று சென்றனர்; ஒரு நொடியில் - கண நேரத்துக்குள்ளாக; பன்னற்கு அரிய - புகழ்தற்கு அரிய பெருமை வாய்ந்த; பகலவனும் பகலும் வந்து பரந்த - சூரியனும் பகற் பொழுதும் வந்து பரவலாயின; உடு - விண்மீன்; ஆல் - அசை. 116 |