கலிவிருத்தம் 3185. | மணந்த பேர் அன்பரை, மலரின் சேக்கையுள், புணர்ந்தவர், இடை ஒரு வெகுளி பொங்கலால், கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று உணர்ந்திலர்; கனவினும் ஊடல் தீர்ந்திலர். |
கணம் குழை மகளிர்கள் - பலவகைக் காதணிகளும் பூண்ட அரக்க மகளிர்; மலரின் சேக்கையுள் - மலர்ப் படுக்கையில்; மணந்த பேர் அன்பரை - தம்மை மணந்த கணவர் தம்மை; புணர்ந்தவர் - அணைத்து மகிழ்ந்தவர்; இடை ஒரு வெகுளி பொங்கலால் - கூடலிடையே தம் கணவர்பால் கொண்ட ஊடலின் சினம் மீதூர்தலால்; கங்குல் வீந்தது - இரவு முடிந்து போய் விட்டது; என்று உணர்ந்திலர் - என அறியாமற் போயினர்; கனவினும் - உறக்கத்தில் எழும் கனவிலும்; ஊடல் தீர்ந்திலர்- தம் ஊடல் நீங்காதவராய் விளங்கினர். விரைவில் நீங்கும் இரவென உணராமல் ஊடற்கோபம் தொடர உறங்கினர் அரக்க மகளிர். 119 |