3186. தள்ளுறும் உயிரினர்,
     தலைவர் நீங்கலால்,
நள் இரவிடை உறும்
     நடுக்கம் நீங்கலர்-
கொள்ளையின் அலர் கருங்
     குவளை நாள்மலர்
கள் உகுவன என,
     கலுழும் கண்ணினார்.

    நள் இரவிடை - நடு இராத்திரியெனக் கருதத்தக்க வேளையில்;
தலைவர் நீங்கலால் - (விடிந்து போனதால்) தங்கள் கணவர் பிரிந்து
சென்றமையினால்; தள்ளுறும் உயிரினர் - உடல் விட்டு நீங்கும்
உயிரென்ற தன்மை உடையராய்; உறும் நடுக்கம் நீங்கலர் - மெய்யில்
ஏற்பட்ட நடுங்குதல் நீங்காதவராய் (அரக்க மகளிர் சிலர்); கொள்ளையின்
அலர் -
மிகுதியாகச் செழித்து மலர்ந்த; கருங்குவளை நாள் மலர் - புதிய
கருங்குவளை மலர்கள்; கள் உகுவன என - தேன் சிந்துவன போன்று;
கலுழும் கண்ணினார் - கண்ணீர் பொழியும் கண்களை உடையார்
ஆயினர்.

     இரவு நீங்கியதால் ஏற்பட்ட விசித்திர நிகழ்ச்சிகளில் ஒன்றாக
இதனைக் கூறினார்.                                            120