3188. | அளிஇனம் கடம்தொறும் ஆர்ப்ப, ஆய் கதிர் ஒளி பட உணர்ந்தில, உறங்குகின்றன; தெளிவுஇல இன் துயில் விளையும் சேக்கையுள் களிகளை நிகர்த்தன, களி நல் யானையே. |
அளி இனம் - வண்டுகளின் கூட்டம்; கடம் தொறும் ஆர்ப்ப - கன்னங்களில் பொழியும் மதநீரில் மொய்த்து ஆரவாரிக்கவும்; ஆய் கதிர் ஒளிபட - வெளிச்சத்தால் சிறந்த சூரிய ஒளி பாயவும்; உணர்ந்தில உறங்குகின்றன - விழிப்புறாமல் உறங்குகின்றனவான; களி நல் யானை - மதங்கொண்ட உயர்ந்த யானைகள்; இன்துயில் விளையும் சேக்கையுள் - இனிய உறக்கம் தரும் படுக்கையில்; தெளிவு இல - தூக்கம் தெளியாமல் உறங்கும்; களிகளை நிகர்த்தன - கட்குடியர்களைப் போல விளங்கின; ஏ- ஈற்றசை. திடீரென விடிந்தமையின் விளைவாய் யானைகளும்துயிலெழாதிருந்தன. களி(ப்பு)கள் உண்பதால் வரும் போதை.கட்குடியர்களை உயர்திணையாகக் கருதுதலும் பொருந்தாது என்பார் போல்களிகள் என அஃறிணையில் சுட்டினார். 122 |