3189.விரிந்து உறை துறைதொறும்
     விளக்கம் யாவையும்,
எரிந்து இழுது அஃகல,
     ஒளி இழந்தன-
அருந் துறை நிரம்பிய
     உயிரின் அன்பரைப்
பிரிந்து உறைதரும்
     குலப் பேதைமாரினே.

     அருந்துறை நிரம்பிய - அரிய அறிவுத் துறைகளில் வல்ல; உயிரின்
அன்பரை -
(தம்) உயிர் போன்ற கணவரை; பிரிந்து உறை தரும் -
பிரிந்து தனித்திருக்கும்; குலப் பேதைமாரின் - குல மாதர்களைப் போன்று;
விரிந்து உறை துறை தொறும் - நகரின் விரிந்த பல பகுதிகளிலும்;
விளக்கம் யாவையும் - உள்ள விளக்குகள் எல்லாம்; எரிந்து இழுது
அஃகல -
எரிந்து நெய் வற்றவில்லையாயினும்; ஒளி இழந்தன - (சூரியன்
வரவால்) தம் ஒளி குன்றின; ஏ - ஈற்றசை.

     பகலின் எதிர்பாராத வரவினால் நேர்ந்த இரண்டு நிகழ்ச்சிகளை
ஒன்றற்கொன்று உவமையாக மொழிந்தார் அஃகுதல் - சுருங்குதல்.
அஃகுதல் இல : அஃகல்.                                       123