3197.'திங்களோ அன்று இது;
     செல்வ! செங் கதிர்
பொங்கு உளைப் பச்சை அம்
     புரவித் தேரதால்;
வெங் கதிர் சுடுவதே
     அன்றி, மெய் உறத்
தங்கு தண் கதிர் சுடத்
     தகாது, என்றார் சிலர்.

    சிலர் - (இராவணன் இவ்வாறு கூறக்கேட்ட) சில பேர்; 'செல்வ -
திரு மிக்கவனே; இது திங்களோ அன்று - இது சந்திரன் அல்ல;
செங்கதிர் - சிவந்த கதிரவனே; பொங்கு உளை - வளர்ந்த பிடரி மயிரை
உடைய; பச்சை அம் புரவித் தேர் அது - பச்சை நிறமான அழகிய
குதிரைகள் பூட்டிய தேர் அது; வெங்கதிர் சுடுவதே அன்றி - வெப்பம்
மிக்க சூரியன் சுடுதல் இயல்புடையதே அல்லாமல்; மெய் உறத் தங்கு
தண்கதிர் -
உடலில் பட்டுக் குளிர்ச்சி தரும் சந்திரன்; சுடத் தகாது -
வெப்பம் ஊட்டுவது அன்று'; என்றார் - என விளக்கம் கூறினர்; ஆல் -
அசை.

     சூரியன் குதிரைகள் பசுமை நிறம் கொண்டனவாகக் கூறுதல் புராண
மரபு.                                                       131