3201. | 'தாது உண் சடிலத் தலை வைத்தது- தண் தரங்கம் மோதும் கடலிற்கிடை முந்து பிறந்தபோதே, ஓதும் கடுவைத் தன் மிடற்றில் ஒளித்த தக்கோன், "ஈதும் கடு ஆம்", என எண்ணிய எண்ணம் அன்றே? |
தண் தரங்கம் - குளிர்ந்த அலைகள்; மோதும் கடலிற்கிடை - வீசும் திருப்பாற் கடலிடையே இருந்து; முந்து பிறந்த போதே - முன்பு உதித்த காலத்தில்; ஓதும் கடுவை - கொடிதாய் உரைக்கப்படும் ஆலகால நஞ்சை; தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் - தன் கழுத்தில் மறைத்த சிவபெருமான்; தாது உண் சடிலம் - (கொன்றைப் பூவின்) மகரந்தம் மலிந்த சடை முடி சூழ்ந்த; தலை வைத்தது - தலைமீது பிறையை வைத்துக் கொண்டது; ஈதும் கடு ஆம் என - இதுவும் விடம் ஆகும் என்று; எண்ணிய எண்ணம் அன்றே - கருதிய கருத்தினால் அல்லவா? இப்பாடலின் கருத்து தற்குறிப்பேற்ற அணி. 135 |