3242.'வெப்பு அழியாது என் நெஞ்சும்
     உலர்ந்தேன், விளிகின்றேன்.
ஒப்பு இலர் என்றே, போர் செயல்
     ஒல்லேன்; உடன் வாழும்
        துப்புஅழி செவ் வாய் வஞ்சியை
     வௌவ, துணை கொண்டிட்டு
இப் பழி நின்னால் தீரிய வந்தேன்,
     இவண்' என்றான்.

    வெப்பு அழியாது - (முற்கூறிய நிகழ்ச்சியால்) மனத்தின் வெப்பம்
தணியாமல்; என் நெஞ்சும் உலர்ந்தேன் - என் உள்ளமும் வாடினேன்;
விளிகின்றேன் - உயிரும் அழிகின்றேன்; ஒப்பு இலர் என்றே -
அம்மானுடர் என் ஆற்றலுக்கு நிகர் ஆகாதார் என்பதால்; போர் செயல்
ஒல்லேன் -
அவர்களோடு போரிடவும் விருப்பம் கொள்ளேன்; உடன்
வாழும் துப்பு அழி செவ்வாய் -
பவளத்தை வெல்லும் சிவந்த இதழ்களை
உடைய; வஞ்சியை வௌவ - சீதையைக் கவர்ந்து வர; துணை
கொண்டிட்டு -
உன் உதவியை மேற்கொள்ள வேண்டியும்; இப்பழி
நின்னால் தீரிய -
எனக்கு நேர்ந்த அவமானத்தை உன்னால் துடைப்பதற்கு
வேண்டியும்; இவண் வந்தேன் - இங்கு (உன்பால்) வந்தேன்; என்றான் -
என்று இராவணன் மொழிந்தான்.

     என்னுடைய சகோதரியை அவர்கள் இழிவுபடுத்தியதால்அவர்களுடன்
இருக்கும் சீதையைக் கவர்ந்து அவர்களைஇழிவுபடுத்துவேன் எனத் துணை
நாடினான் இராவணன்.                                          6