3246. | 'திறத் திறனாலே, செய் தவம் முற்றித் திரு உற்றாய், மறத் திறனாலோ? சொல்லுதி-சொல் ஆய் மறை வல்லோய்! அறத் திறனாலே எய்தினை அன்றோ? அது, நீயும் புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ? |
'சொல் ஆய் மறை வல்லோய் - ஆய்ந்தெடுத்த சொற்களால் உருவான வேதங்களில் பயிற்சி உடையவனே; திறத்திறனாலே - அறநெறி நின்று; செய்தவம் முற்றி - கடுந்தவம் நிறைவுற்று; திரு உற்றாய் - செல்வ வளம் எய்தினாய்; மறத்திறனாலோ சொல்லுதி - (அன்றி) அதரும நெறியினாலோ அவை உனக்குக் கிடைத்தன என்று எண்ணிக் கூறுவாயாக; அறத்திறனாலே - நல்லற வழியினாலே; எய்தினை அன்றோ - அனைத்து நலமும் பெற்றாய் அல்லவா; பின்னும் - மீண்டும்; புறத்திறனாலே - அறத்திற்குப் புறம்பான வழியிலே; அது நீயும் - அச் செல்வத்தை நீ தான்; இழக்கப் புகுவாயோ? - தொலைக்கும் வழியில் செல்லுவாயோ. நீயும் - உயர்வு சிறப்பு உம்மை. 10 |