3260.' "உஞ்சு பிழையாய் உறவினோடும்"
     என உன்னா,
நெஞ்சு பறைபோதும்; அது
     நீ நினையகில்லாய்;
அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து
     அருகு நின்றார்,
நஞ்சு நுகர்வாரை, "இது நன்று"
     எனலும் நன்றோ?

    "உஞ்சு பிழையாய் உறவினோடும் - உன் உறவினரோடு நீயும் தப்ப
முடியாது; என உன்னா - என்று எண்ணும் அளவில்; நெஞ்சு பறை
போதும் -
நெஞ்சம் பறை கொட்டி அறிவிக்கும் நிலையில்; எனது
ஆருயிர் அஞ்சும் -
என்அரிய உயிர் பதைக்கின்றது; அது நீ
நினையகில்லாய் -
நீ அதனைக் கருத்தில் எண்ணாதிருந்தாய்; நஞ்சு
நுகர்வாரை -
விடம் அருந்துகின்றவர்களை; அறிந்து அருகு நின்றார் -
அறிந்து பக்கத்தில் நின்றோர்; இது நன்று - உங்கள் செயல் நன்று;
எனலும் நன்றோ - என்று கூறுதலும் நல்ல செயலாகுமா?"

     நீ நஞ்சு அருந்துவது போல் தீமை செய்யக் கருதுகையில், அதனை
அறிந்த நான் நன்று எனப் பாராட்டல் சரியாகுமா எனக் கேட்டான் மாரீசன்
நினைகில்லாய் - எண்ணும் ஆற்றல் இல்லாதவனாயினாய். (இல் - ஆற்றலை
உணர்த்த வரும் இடைச்சொல்.)                                  24