3261. | 'ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும், மற்றைத் தேசம் முதல் முற்றும், ஓர் இமைப்பின் உயிர் தின்ப- கோசிகன் அளித்த கடவுட் படை, கொதிப்போடு ஆசு இல, கணிப்பு இல, இராமன் அருள் நிற்ப, |
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் - சிவபெருமான் முதல் தேவர் உலகு வரை; மற்றைத் தேசம் முதல் முற்றும் - வேறு பகுதிகளையும் சேர்த்து முழுவதிலுமாய்; கோசிகன் அளித்த கடவுட் படை- விசுவாமித்திர முனிவனால் வழங்கப்பட்ட தெய்வ அம்புகள்; கொதிப்போடு- பொங்கும் அனலோடு; ஓர் இமைப்பின் உயிர் தின்ப - இமைப் பொழுதில் உயிரைப் பருகி முடிக்கும் வல்லமை உடையன; ஆசில - குற்றம் (தோல்வி) அறியாதவை; கணிப்புஇல் - கணக்கில்லாதவை; இராமன் அருள் நிற்ப - இராமபிரானிடம் (ஏவல் பூண்டு) அருள் காத்து நிற்பனவாம். தாடகை வதம் முடிந்து வேள்வி காத்தபின் விசுவாமித்திரரும், முனிவரும் அளித்த தெய்வப் படைகள் பல இராமனிடம் பொருந்தி உள்ளன. இது குறித்துப் பால காண்டம் வேள்விப் படலம் (394, 395, 396) கௌசிகன் - விசுவாமித்திர முனிவர். குசிகன் குலத்தில் பிறந்தோன். 25 |