3265.'மூஉலகினுக்கும் ஒரு
     நாயகம் முடித்தேன்;
மேவலர் கிடைக்கின், இதன்மேல்
     இனியது உண்டோ?
ஏவல் செயகிற்றி, எனது
     ஆணை வழி; எண்ணிக்
காவல் செய் அமைச்சர் கடன்
     நீ கடவது உண்டோ?

    மூவுலகினுக்கும் - மேல், நடு, கீழ் எனும் மூன்று உலகங்களுக்கு;
ஒரு நாயகம் - தனி நாயகனாய்; முடித்தேன் - வெற்றி பெற்று
முடித்தேன்; (அத்தகைய எனக்கு); மேவலர் கிடைக்கின் - (இன்னும்
வெல்லுதற்குப்) பகைவர் கிடைப்பாராயின; இதன் மேல் இனியது
உண்டோ -
அதனினும் இனிதான ஒன்று வேறு உண்டோ; எனது ஆணை
வழி ஏவல் செயகிற்றி -
என் கட்டளைப்படி ஏவல் செய்வாயாக;
எண்ணிக்காவல் செய் அமைச்சர் கடன் - சிந்தனை செய்து அரசுக்குப்
பாதுகாப்புச் செய்யும் அமைச்சர் பொறுப்பை; நீ கடவது உண்டோ - நீ
செய்யக் கருதுதல் பொருந்துமோ? (பொருந்தாது).

     என் பணி செய்வதே உன் கடமை. அறிவுரை மொழியும் அமைச்சர்
பொறுப்பு உனக்கு உரியதன்று என்று மாரீசனுக்கு இராவணன் கூறினான்.

     (அறிவுடைய அமைச்சன் நீ அல்லை) (7361) எனக்
கும்பகருணனிடமும் இராவணன் கூறுதல் ஒப்புநோக்கத் தக்கது.29