3282. உண்டாகிய கேடு
     உடையார், துயில்வாய்
எண் தானும் இயைந்து
     இயையா உருவம்
கண்டார் எனலாம்
     வகை, கண்டனளால்-
பண்டு ஆரும் உறா
     இடர்பாடுறுவாள்.

    உண்டாகிய கேடு உடையார் - நிச்சயம் அழிவு நேரும் என்ற
நிலையில் உள்ளார்; துயில்வாய் - உறக்கம் கொள்ளுகையில்; எண் தானும்
இயைந்து இயையா உருவம் -
எண்ணத்தில் ஒரு போதும் இசைந்திராத
விசித்திர வடிவங்களை; கண்டார் எனலாம் வகை - கனவிற் கண்டார்கள்
என்று கூறத்தக்க முறையில்; பண்டு ஆரும் உறா இடர் - எக்காலத்தும்
முன்பு எவரும் படாத துயரம்; பாடு உறுவாள் - பட இருக்கின்றவளான
சீதை; கண்டனள் - மாய மானைக் கண்டாள்; (ஆல் - அசை)

     துன்பம் வருமுன் கனவு போன்ற முன் சகுனங்கள் தோன்றினாற்
போலச் சீதை முன் பொன்மான் விபரீதம் விளைவிக்கத் தோன்றியது.46