3283. | காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பேணினளால்- வாழ்நாள் அவ் இராவணன் மாளுதலால், வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால். |
அவ் இராவணன் வாழ்நாள் - அந்த இராவணனின் ஆயுட் காலம்; மாளுதலால் - முடிய இருப்பதனாலும்; வீழ் நாளில் - அவன் மரணமுறுகிற நாளில்; அறம் புவி மேவுதலால் - தருமம் பூமியில் செழிக்க இருப்பதனாலும்; (சீதை); காணா - பொன்மானைக் கண்டு; 'இது கைதவம்' என்று உணராள் - 'இது வஞ்சனை வேடம்' என்று உணராதவள் ஆனாள்; பேணாத - ஆதரித்தற்கு ஒவ்வாத; நலம் கொடு பேணினள் - அழகில் ஆர்வம் கொண்டு (மாயமானை) விரும்பி நின்றாள். (ஆல் - அசை) சீதை மாயமானை விரும்பியதற்குக் காரணம் இராவணன் அழிவும், அறத்தின் புத்துயிர்ப்பும் ஒரு சேர நடைபெறும் காலம் நெருங்கியதால் என்றார். 47 |